
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? - அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ராமர் கோயில் பாதுகாப்புக்காக சுற்றுப்புற மாவட்டக் காவல்நிலையங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவராக அயோத்தியின் அருகிலுள்ள மானக்பூர் காவல்நிலையத்தின் 45 வயது தலைமை பெண் காவலரும் இருந்தார். உ.பி.,யின் பிரயாக்ராஜை சேர்ந்த இப்பெண் காவலர், கடந்த ஆகஸ்ட் 30 அன்று மானக்பூரிலிருந்து வந்த சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் அயோத்திக்கு வந்துள்ளார். ஆனால் அவர் அயோத்தியில் இறங்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aBR05dc
0 Comments