Crime

பல்லாவரம்: ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(28). இவர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அம்மு (24) என்ற பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு, பல்லாவரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பாடி பில்டரான சூர்யா, அகில இந்திய அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை பெற்றதாக கூறப்படுகிறது. உடற்பயிற்சி நேரம் போக மற்ற நேரங்களில் சூர்யா அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சூர்யா மதுப் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் முறையாக வேலைக்குச் செல்லாமல் எந்நேரமும் சூர்யா மது போதையில் இருந்து வந்தார். இதை அம்மு கண்டித்ததால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UrsCXFG

Post a Comment

0 Comments