Crime

சேலம்: சேலம் அருகே சங்ககிரியில் நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்கு பதிந்து, ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் - மருமகன் பிரச்சினைக்கு தீர்வு காண சென்ற பெற்றோர்: சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜதுரை (28). இவர் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தற்காலிக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறைச் சேர்ந்த பழனிசாமி மகள் பிரியா (25) என்பவருக்கும் திருமணமாகி சஞ்சனா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/643wVIs

Post a Comment

0 Comments