
ராணிப்பேட்டை: வாங்கிய கடனை செலுத்தா விட்டால் வீட்டை பூட்டி ‘சீல்' வைப்போம் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதாக கூறி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை கண்டித்து, அவரது உறவினர்கள் சென்னை - சித்தூர் சாலையில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த புதிய அக்ராவரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் மெக்கானிக் மணி (50). இவரது மனைவி கீதா (45). இவர், சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c9QkaJb
0 Comments