
புதுடெல்லி: கடந்த 2011 முதல் 2020 ஆகஸ்ட் வரையில் சுங்கத் துறையில் இணை ஆணையராக இருந்தவர் சச்சின் சாவந்த். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரியான சாவந்த் பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.11 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை எம்.பி., எம்எல்ஏ தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மும்பை ஐஆர்எஸ் அதிகாரியான சாவந்த் தனது பதவிக் காலத்தில் முறைகேடான வழிகளில் ரூ.4.11 கோடி அளவுக்கு சொத்துகளை சேர்த்துள்ளார். சட்டவிரோதமாக கிடைத்த பணத்தை சாவந்த் அவரது தந்தை, தாய், சகோதரர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் டெபாசிட் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wNBLv6D
0 Comments