Crime

சென்னை: சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர்வணிக வளாகம் ஒன்றில் உதவி மேலாளராக உள்ளார். இவர் தனது பெண் தோழி ஒருவருடன் மெரினா, பார்த்தசாரதி ஆர்ச் எதிரில் உள்ள மெரினா கடற்கரை மணற்பரப்பில் கடந்த 22-ம் தேதி இரவு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த இளைஞர் ஒருவர், தன்னை `போலீஸ்' என அறிமுகம் செய்ததோடு, இருவரையும் தனது செல்போனில் படம் பிடித்தார்.

பின்னர் இருவரிடமும், ``உங்கள் வீட்டுக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி விடுவேன். மேலும், சமூக வலைதளங்களிலும் பரப்பிவிடுவேன். இதனால், உங்கள் குடும்ப வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். நான் அவ்வாறு செய்யாமலிருக்க ரூ.15 ஆயிரம் கொடுங்கள்'' எனக்கூறி மிரட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aBxpPsM

Post a Comment

0 Comments