Crime

மதுரை: தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்-2 இரண்டாம் நிலை பொது அறிவுத் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தேர்வு மைய சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பி.ஏ. தமிழ் படித்துள்ளேன். குரூப்-2 மற்றும் குரூப் - 2 ஏ பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்த தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், இரண்டாம் நிலை பிரதானத் தேர்வில் பங்கேற்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U8FKqQi

Post a Comment

0 Comments