
சென்னை: போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராகபோலீஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி முதல் கடந்த 11-ம் தேதி வரைதமிழகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 13 பெண்கள் உட்பட 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, அவர்களிடமிருந்து ரூ.1.18 கோடி மதிப்புள்ள 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rhk1XOM
0 Comments