
சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் காவலாளி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் சென்னையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதிலும் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன், பிரத்யேக வாகனங்களில் கோடிக்கணக்கான பணத்தை ஊழியர்கள் எடுத்துச் சென்று ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புகின்றனர்.
இதுபோன்ற ஒரு நிறுவனம் சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து நேற்று காலை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது, அந்த நிறுவன காவலாளி பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராணா குமார் (30) என்பவரது உடலில் குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TcqPZ8
0 Comments