Crime

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 10 பேர் சிறிய காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தபோதும், அடுத்தடுத்து பழிவாங்கும் வகையில் கொலைகள் நடைபெற்ற வண்ணம் இருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பழிக்குப்பழியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிறிய மோதல் தொடர்பாக ஏற்படும் முன்விரோதம் கடைசியில் கொலையில் முடிகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பேட்டை மயிலப்பபுரம் பிச்சையா, சுத்தமல்லியில் கொம்பையா, மேலவீரராகவபுரம் மகேஸ், மேலநத்தம் மாயாண்டி, வீரவநல்லூர் அருணாச்சலகுமார் உட்பட 10 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ThA7BRG

Post a Comment

0 Comments