
மறைமலை நகர்: மறைமலை நகரை அடுத்த பொத்தேரியில் இருசக்கர வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் அதே இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
பொத்தேரியில் நேற்று காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக சென்டர் மீடியன் பகுதியில் 3 இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தன. அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்லாரி ஒன்று இந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி நின்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8qyjeX6
0 Comments