Crime

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் சாலை ஓரத்தில் நின்றுருந்த அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஜெபக் கூட்டம் நடந்து வருகிறது. இதற்காக திருச்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட அரசு பேருந்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. பேருந்தை தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்தார்.பாளையம்பட்டி அருகே வந்தபோது பேருந்தில் திடீரென டீசல் குறைந்து ஏர் லாக் ஆனதால் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EVf3KY9

Post a Comment

0 Comments