Crime

மசினகுடி: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம் தம்பதி, நீலகிரி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். மசினகுடியை அடுத்த ஆச்சக்கரை பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

ஜன்னலின் மறைவான பகுதியில் இருந்தவாறு இளைஞர் ஒருவர், செல்போன் மூலமாக பெண்ணை வீடியோ எடுப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். கணவரும், அங்கிருந்த மற்ற சுற்றுலா பயணிகளும் வந்து இளைஞரை பிடித்தனர். விசாரணையில், வீடியோ எடுத்த இளைஞர் மசினகுடியை சேர்ந்த ஷிண்டு (22) என்பதும், அதே தனியார் விடுதியில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c2ZSvU

Post a Comment

0 Comments