
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கவிதா(40). இவரின் மூத்த சகோதரியின் கணவர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலசேகர்.
புதுக்கோட்டையில் ஜவுளிக்கடை வைப்பதற்காக கவிதாவுக்கு கடனாக கொடுத்த பணத்தை திருப்பித்தராதது குறித்து மே 9-ம் தேதி கருக்காக் குறிச்சி தெற்கு தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு, பாலசேகர் தனது நண்பர்களுடன் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் கவிதா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பாலசேகர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lJaAb0
0 Comments