
திருச்சி: திருச்சி அருகே நகைக்காக அடுத்தடுத்து 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 கொலைகளுக்கு மட்டும் சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. சப்பாணி மீது உள்ள மேலும் 6 கொலை வழக்குகளுக்கு ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (34). கார் ஓட்டுநர். இவர் 2016 செப். 7-ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விசாரித்த திருவெறும்பூர் போலீஸார், தங்கத்துரையின் செல்போனை, கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த சப்பாணி(35) என்பவர் பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fmWzRVN
0 Comments