
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மாயமான இரண்டு குழந்தைகளை போலீஸார் வாலாஜாபாத் அருகே மீட்டனர். குழந்தைகளைக் கடத்திய பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணுகாஞ்சி (பி2) காவல் நிலைய எல்லையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று, 7 வயது பெண் குழந்தை, 3 வயது ஆண் குழந்தை ஆகிய இருவர் கடத்தப்பட்டனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவர்களைக் கடத்திச் சென்றார். கடத்தலுக்கு முன்னர் அப்பெண் குழந்தைகளிடம் நேசமாகப் பேசியுள்ளார். குழந்தைகளின் பெற்றோரிடம் நல்லவர் போல் நடித்துள்ளார்.பின்னர் இரு குழந்தைகளையும் அவர் கடத்திச் சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9Vj2mqn
0 Comments