Crime

புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் நூவில் நடந்த வகுப்புவாத வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஒருவரை செவ்வாய்க்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் போலீஸார் காலில் சுட்டுப்பிடித்தனர். இந்தச் சம்பவம் நூ மாவட்டத்தின் தாரு பகுதியில் நடந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரான வாஸிம் மீது ஏற்கெனவே கொலை மற்றும் கொள்ளை வழக்குள் உள்ளன. அவரது தலைக்கு ரூ.25.000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாஸிம் தாருவில் உள்ள ஆரவள்ள பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SLhTPWB

Post a Comment

0 Comments