
சென்னை: கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ரவுடிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது நண்பர்களுடன் கடந்த 23-ம் தேதி இரவு, எருக்கஞ்சேரி, மேற்கு இந்திரா நகர் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 10 பேர் கும்பல் ரவி மற்றும் அவருடன் நின்று கொண்டிருந்த நபர்களை சூழ்ந்துகொண்டு கத்திமுனையில் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச்சங்கிலி, பணம்ரூ.20 ஆயிரம் மற்றும் 5 செல்போன்களை பறித்துவிட்டுத் தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KnCWrSx
0 Comments