
உடுமலை: தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (50). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாற்றுத்திறனாளி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், உறவினரின் மகளான பள்ளி மாணவியை வீட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
அதற்காக மாத சம்பளமும் கொடுத்துள்ளார். பள்ளிக்கு சென்று திரும்பியதும், வீட்டு வேலைகளை செய்து அங்கேயே மாணவி தங்கி பள்ளி படிப்பை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இதற்கிடையே, கல்லூரி படிப்பை மாணவி முடித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1QYvFTG
0 Comments