
சென்னை: சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கடத்துவோர், விற்பனை செய்வோரைக் கண்டறிந்து, போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இதையொட்டி, ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் ஓட்டேரி செல்லப்பா தெருவில் சோதனைமேற்கொண்டு, கஞ்சா வைத்திருந்த டோபிகானா வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பவித்ரன் (26) என்பவரைக் கைது செய்தனர். தொடர்ந்து, அவரது கூட்டாளியான பெரம்பூர் மங்களபுரம் பரமேஸ்வரி (27) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aYDGO3t
0 Comments