Crime

சென்னை: மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி (50). இவர் சென்னை நொளம்பூர் எஸ்என்பி கார்டன் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்தநிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் பாபுஜி, அந்த நிறுவனத்தில் பணத்தைக் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வெங்கட்ராமனுக்கும், பாபுஜிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையே வெங்கட்ராமன் தரப்பினர் கடந்த பிப். 23-ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த பாபுஜியை கடத்தி சென்று சித்ரவதை செய்து கொலை செய்தனர். பின்னர்பாபுஜி சடலத்தை கொளப்பாக்கத்தில் உள்ள ஒரு குப்பை மேட்டில் எரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Er936mF

Post a Comment

0 Comments