
மதுரை: மதுரையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து 2 கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மதுரை திடீர் நகர் பகுதியிலுள்ள நன்மை தருவார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் தர்ஷன் (19). இவரது பிறந்த நாளை நண்பர்களுடன் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாட திட்டமிட்டார். இதையொட்டி கடந்த 2 நாளுக்கு முன்பு , அவரது வீட்டுக்கு அருகிலுள்ள போட்டோ ஸ்டூடியோ ஒன்றில் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக நண்பர்கள், உறவினர்களை அழைத்து இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AOuhywp
0 Comments