Crime

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சோதனைக்குச் சென்ற ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்று காரில் கடத்தப்பட்டனர். போலீஸார் அவர்களை மீட்டு, 4 பேரை கைது செய்துள்ளனர்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத், சரூர் நகரில் உள்ள சில கடை உரிமையாளர்கள் சரிவர ஜிஎஸ்டி செலுத்துவதில்லை என புகார்கள் எழுந்தன. இந்த ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக சரூர் நகரில் உள்ள சாய் கிருஷ்ணா நகருக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறையின் மணிசர்மா, ஆனந்த் என்ற இரு அதிகாரிகள் நேற்று சென்றனர். இவர்கள் அங்குள்ள 2 இரும்பு கடைகளில் கணக்குகளை தணிக்கை செய்ய முயன்றனர். அப்போது சிலர் அவர்களின் அடையாள அட்டைகளை பறித்துக் கொண்டு அவர்களை தாக்கினர். மேலும் இருவரையும் ஒரு காரில் கடத்திச் சென்றனர். பிறகு இவர்களை விடுவிக்க ரூ.5 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fYU06hd

Post a Comment

0 Comments