Crime

கோழிக்கோடு: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி வீடியோ அழைப்பு மூலம் நண்பர் உருவம் மற்றும் குரலில் பேசி, கேரள நபரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு வாட்ஸ் அப்-ல் தெரியாத எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசும்போது அவருடன் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் நண்பரின் உருவம் தெரிந்தது. அவர் மருத்துவமனையிலில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு உதவ வேண்டியுள்ளதால் ரூ.40,000 கூகுள் பே மூலம் அனுப்பும்படி கூறியுள்ளார். அந்த குரலும், அவரது நண்பர் குரல் போல் அப்படியே இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lolt1AT

Post a Comment

0 Comments