
திருச்சி: திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு அருகே திருச்சி- திண்டுக்கல் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் விஜயகுமார், அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினார். அப்போது, காரில் வந்தவர்களில் ஒருவர் இறங்கி தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து, அந்த காரை காவலர் விஜயகுமார் சோதனையிட்டபோது, அதில் சாக்கு மூட்டையில் ரத்த காயங்களுடன் ஓர் ஆண் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில் ராம்ஜி நகர் மற்றும் சோமரசம் பேட்டை போலீஸார் அங்கு சென்று, காரில் இருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IByLlcA
0 Comments