
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்ருதஹள்ளியில், ‘ஏரோனிக்ஸ்’ என்ற ஐடி நிறுவனம் உள்ளது. இதன் தலைமை செல் அதிகாரியாக (சிஇஓ) வினு குமார் (40), நிர்வாக இயக்குநராக (எம்.டி.) பனீந்திர சுப்ரமண்யா (36) ஆகியோர் பணியாற்றினர். இருவரும் ஓராண்டுக்கு முன்பு பணியாற்றிய ‘ஜி நெட்’ என்ற ஐ.டி. நிறுவனத்தில் இருந்து கடந்த 6 மாதங்களாக மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும் அலுவலகத்தில் தங்களது அறையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஜி நெட் ஊழியர்கள் சபரீஷ் (27), வின‌ய் ரெட்டி (23) மற்றும் சபரீஷின் நண்பர் சந்தோஷ் (26) ஆகியோர் வினு குமார், பனீந்திர சுப்ரமண்யா ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S4EPKOQ
0 Comments