
சென்னை: ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் (24). கார் ஓட்டுநர். இவரிடம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் எனக் கூறி சஞ்சய் சர்மா (44) என்பவர் வாடகைக்கு கார் முன்பதிவு செய்து, ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறக்கிவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, சஞ்சய் சர்மாவை காரில் அழைத்து சென்ற போது, தினேஷ்குமாரை, சஞ்சய் சர்மா கோடம்பாக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றார். அங்கு சஞ்சய் சர்மா மது அருந்தினார். அப்போது தினேஷ் குமாரிடம் அவசர தேவை என்றுக் கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.8 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். பின்னர் தனது செல்போனில் ‘சார்ஜ்’ இல்லை என்று கூறி தினேஷ் குமாரின் செல்போனை வாங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OAwMr6y
0 Comments