
சென்னை: தனது புகைப்படத்தை பயன்படுத்தி போலியான முகநூல் (ஃபேஸ்புக்) கணக்கு தொடங்கி, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஓய்வு பெற்ற டிஜிபி ரவி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
தாம்பரம் காவல் முன்னாள் ஆணையரும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ஐபிஎஸ் அதிகாரி எம்.ரவி சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், நல்வழிப்படுத்தும் வகையிலும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். மேலும், அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து ‘யூ டியூப்பில்’ வீடியோ வெளியிட்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NVW6vXQ
0 Comments