
சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, உங்கள் குரல் சேவையில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்து தமிழ் நாளிதழின் உங்கள் குரல் சேவையைத் தொடர்பு கொண்டு அம்பத்தூரை சேர்ந்த வாசகர் சங்கர நாராயணன் கூறியதாவது: சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார ரயில்களில் நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்களில் அண்மைக்காலமாக செல்போன் பறிப்புச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நடைமேடைகளில் இருந்தவாறு பறிப்பதும், ரயில்களுக்குள் ஏறி பறித்துக் கொண்டு ஓடுவதுமாக தொடர்ந்து நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1iTSJxG
0 Comments