
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். கடையநல்லூர் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலரான இவர், தன்னை விடுதலை
சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். துபாயில் வேலை பார்த்து வரும் கடையநல்லூரைச் சேர்ந்த சேக் உதுமான் என்பவரிடம் வீட்டுமனை வாங்கி தருவதாகக் கூறி கவுன்சிலர் அப்துல் வகாப் ரூ.52 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் அவர் வீட்டுமனையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rQUCdpX
0 Comments