Crime

திண்டுக்கல்/காஞ்சிபுரம்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக ஆர்.மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவர், திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் மகேஸ்வரி வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

2020-2021-ம் ஆண்டில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக ஆர்.மகேஸ்வரி பணிபுரிந்தார். அப்போது, கரோனா பரவல் தடுப்பு சுகாதாரப் பணிகளுக்காக பொருட்கள் வாங்கியதில் ரூ.32 லட்சம் முறைகேடு நடந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மணி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fe9iGZH

Post a Comment

0 Comments