Crime

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26). இவர், சட்டவிரோதமாக மது விற்ற வழக்கில் கடந்த 11-ம் தேதி புளியங்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்கசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தங்கசாமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் புளியங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/68tYSWQ

Post a Comment

0 Comments