
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் க.ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: புளியங்குடி வட்டம், நடுகருப்பழக தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் தங்கசாமி (26), கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவரை புளியங்குடி காவல்துறையினர் கடந்த 11-ம் தேதி கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர் சிறையில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். தங்கசாமி மீது இதற்கு முன் எவ்வித வழக்கும் இல்லாத நிலையில், அவரை விசாரணை என்று போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதும், மேலும் அவரை கைது செய்த விவரமோ, சிறையிலடைத்த விவரமோ குடும்பத்தாருக்கு தெரிவிக்காததும் கண்டிக்கத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CqmkfaD
0 Comments