
புதுச்சேரி: புதுச்சேரி புஸ்சி வீதியில் தனியார் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பள்ளிச் சிறுமிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
புதுச்சேரி உழவர்கரை நிக்கிஷா (10), மூலகுளம் அவந்திகா (10), திஷா சலோம் (10), அரும்பார்த்தபுரம் ஹர்ஷீதா லஷ்மி (8), தீக்‌ஷாஷா, உழவர்கரை பூர்ணிகா (8), கோபாலன்கடை தட்சதா (10), ரெட்டியார்பாளையம் கிரண்யா (10) ஆகியோர் புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை பள்ளிச் சிறுமிகள் 8 பேரும் ஆட்டோவில் பள்ளிக்கு புறப்பட்டனர். ஆட்டோவை மூலகுளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் விக்னேஷ் (28) என்பவர் ஓட்டி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EOjRAXc
0 Comments