
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தச்சு தொழிலாளி நந்தகுமார் (36) கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகததால் பெற்றோருடன் வசித்து வந்தார். நந்தகுமார் தந்தை நடேசன் (65) அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NXeJiGH
0 Comments