
கரூர்: கரூர் அருகே மாந்தோப்பில் வசித்த தம்பதியினர் நேற்று கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கரூர் டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
கரூர் மாவட்டம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவருக்கு, வாங்கல் அருகே ஓடையூரில் சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. இந்த மாந்தோப்பை கடந்த 19 ஆண்டுகளாக, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த தங்கவேல்(67) மற்றும் அவரது மனைவி தைலி(61) ஆகியோர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தனர். மேலும், அங்கேயே குடிசை அமைத்து வசித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IiuBvwb
0 Comments