
சென்னை: சென்னை வியாசர்பாடி, கல்யாணபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சேவிகா (34). அழகுக்கலை நிபுணராக பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து மேற்கு மாம்பலம் தலையாரி தெருவில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கினார்.
நேற்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் தோழிகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளார். பின்னர், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஆசி மற்றும் வாழ்த்து பெறுவதற்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் பைக் டாக்ஸியில் முன்பதிவு செய்து வியாசர்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். வாடகை இருசக்கர வாகனத்தை மேற்கு மாம்பலம், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்த ஆனந்தன் (34) என்பவர் ஓட்ட, சேவிகா ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HptdNAY
0 Comments