
திருநெல்வேலி: பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதிய விபத்தில் சிக்கி 29 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து மற்றும் வேனின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் முக்காணியை நோக்கி தனியார் பேருந்து இன்று பிற்பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ராமநாதபுரத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் வேனில் திருச்செந்தூருக்கு வந்து சுப்பிரமணியசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, விருதுநகரில் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OXz4d7a
0 Comments