
ராமேசுவரம்: பாம்பன் கடற்கரைப் பகுதியில் ஆயுதக் குவியல்கள் மற்றும் கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
2018-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அன்று ராமேசுவரம் தங்கச்சிமடம் கடற்கரை அருகே அந்தாணியார்புரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் கழிவு நீர் கால்வாய் கிணறு அமைப்பதற்காக தோண்டினர். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடந்தபோது தமிழகத்தில் பயிற்சி பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழீழ போராளிக் குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டு அவை அழிக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5zQZxHJ
0 Comments