Crime

திருவண்ணாமலை: வெம்பாக்கம் அருகே வீட்டு மனை மீது செல்லும் மின்சார கம்பியை அகற்ற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் சக்திவேல். அதே கிராமத்தில் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டுமனை வழியாக மின்சார கம்பி பாதை செல்வதால், வீடு கட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் தடைபட்டுள்ளது. இதையடுத்து, மின்சார கம்பி பாதையை அகற்றி கொடுக்க, வெம்பாக்கம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zBy8Lic

Post a Comment

0 Comments