Crime

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் சிவகாசி 25, ராஜபாளையம் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் 20, விருதுநகர் 18, அருப்புக்கோட்டையில் 11, சாத்தூர் 8, திருச்சுழி 14 என மொத்தம் 121 இடங்களில் அனுமதி இன்றி செயல்படும் பார்களில் ஆய்வு செய்து 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட டி.எஸ்.பிக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தவிட்டுள்ளார்.

சிவகாசி காவல் உட்கோட்டத்தில் சிவன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகம், சிவகாசி - விருதுநகர் சாலையில் 3, விஸ்வநத்தம் கிராமத்தில் 3, பள்ளபட்டி, நாராணாபுரம், சாமிநத்தம், ரிசர்வ் லைன், அனுப்பன்குளம், திருத்தங்கல் உட்பட 25 இடங்களில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி பார்கள் செயல்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/azvJdLj

Post a Comment

0 Comments