Crime

புதுச்சேரி: புதுச்சேரி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடபப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்க நிர்வாக பொறுப்பாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக கொம்பாக்கத்தைச் சேர்ந்த எம்பெருமாள்(69) உள்ளார். சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளராகவும், முதுநிலை எழுத்தராகவும் பாப்பான்சாவடியைச் சேர்ந்த கதிரவன் (48) என்பவர் பணியாற்றி வருகிறார். இதில் கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதனிடையே, இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iI8CUBw

Post a Comment

0 Comments