Crime

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாலக்கோடு வட்டம் கும்மனூர் அடுத்த சூடனூர் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் மகன் நவீன்(30). கட்டிட மேஸ்திரியான இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இன்று (வியாழன்) அதிகாலை வயல் பகுதிக்கு சென்ற நவீன் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gmvEcpl

Post a Comment

0 Comments