
தூத்துக்குடி: உடன்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கொலை செய்யப்பட்டார். உடன்குடி அருகே உள்ள மணப்பாட்டை சேர்ந்தரஸ்கின் டீரோஸ் என்பவரின் மனைவி மெட்டில்டா (55). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கணவர்மும்பையிலும், மகன் சென்னையிலும் பணியாற்றி வருவதால் உடன்குடி அருகே பண்டாரஞ் செட்டிவிளையில் வாடகை வீட்டில் மெட்டில்டா தனியாக வசித்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மெட்டில்டாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மெட்டில்டா வீட்டில் இறந்துகிடந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9YRMmpI
0 Comments