
மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலரை காரில் கடத்தி 34 பவுன் நகைகளை பறித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், 3 பேரை போலீஸார் தேடுகின்றனர்.
மதுரை அண்ணாநகரிலுள்ள சதாசிவ நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (35). ஜல்லிக்கட்டு ஆர்வலர். இவர் கடந்த 26-ம் தேதி பாண்டிகோயில் அருகே நண்பர் பாண்டி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காரில் வந்த 4 பேர் கும்பல் கத்தி முனையில் பிரேம்குமாரை கடத்திச் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qxHa4Kw
0 Comments