
தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் இந்தியில் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட உறவினரையும் தாக்கியுள்ளார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து விசாரித்தபோது அவர் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் நாயக் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தாம்பரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mX98wFG
0 Comments