
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாத்தையாவுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை போலி பத்திரப் பதிவு செய்து மோசடி செய்த சார் பதிவாளர், பத்திர எழுத்தர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் உள்ளிட்ட 5 பேர் மீது நத்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் சாத்தையா (76). இவரது மனைவி வசந்தமாலா. சாத்தையா கடந்த 1991-1996 ல் ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன்கோவில் அருகே வெள்ளப்பொட்டல் கிராமத்தில் 10.23 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதன்பின் சாத்தையா தனது குடும்பத்துடன் சென்னையில் குடியேறிவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8OI40XE
0 Comments