
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.32.68 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றியது தொடர்பாக, பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார், அரசு விருந்தினர் மாளிகையில் சோதனை மேற்
கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2bHdvzK
0 Comments