
சென்னை பூங்கா நகரில் நகைப் பட்டறை நடத்தி வருபவர்கள் அலாவுதீன் (26), சக்ஜத் (26). இருவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நகைப் பட்டறையில் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முகமூடி கொள்ளையர்கள் இருவர், அலாவுதீன், சக்ஜத்தை கத்தியைக் காட்டி மிரட்டி, சரமாரியாகத் தாக்கினர். அவர்களை அங்கேயே கட்டிப் போட்டனர்.
பின்னர் நகைப் பட்டறையிலிருந்த 50 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பினர். தகவலறிந்து தப்பியோடிய கொள்ளையர்களை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடினர். அப்போது கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில் பிடிபட்டவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுஜன்ராய் என்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9wdypgI
0 Comments