Crime

சென்னை: குற்றச் செயல்களை முன் கூட்டியே கண்டறிந்துதடுக்க சென்னையில் வாகன சோதனை மற்றும்தணிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி, சூளைமேடு காவல் நிலைய போலீஸார் எஸ்ஐலோகிதாட்சன் தலைமையில் நேற்று முன்தினம் அதிகாலை, சூளைமேடு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சூளைமேடு சக்தி நகர், 3-வது தெருவைச் சேர்ந்த சத்யராஜ் (32), நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவைச் சேர்ந்த வினோத் குமார் (32) ஆகியோர் ஓர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டும் மற்றொரு இருசக்கர வாகனத்தை டோ (தள்ளிக்கொண்டும்) செய்து கொண்டும் அந்த வழியாக வந்தனர். அவர்களை மடக்கி போலீஸார் விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xcedDLF

Post a Comment

0 Comments